யாழ்.மாவட்ட பாடசாலைகளில் ஆரம்பபிரிவு மாணவர்கள் வருகை மந்தம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட பாடசாலைகளில் ஆரம்பபிரிவு மாணவர்கள் வருகை மந்தம்..!

நாடு முழுவதும் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் பாடசாலைகளில் மாணவர்கள் வரவு மந்த நிலையில் காணப்பட்டதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு பூராகவும் இன்றைய தினம் ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் வழமை போல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

எனினும் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதாகவும் பாடசாலைக்கு வந்த மாணவர்களோடு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு