பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு மற்றும் தரம் 11, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்! ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்த அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு மற்றும் தரம் 11, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்! ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்த அறிவிப்பு..

நாடு முழுவதும் பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு மற்றும் தரம் 11, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கல்வி மற்றும் சுகாதார பிரிவினர் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு விசேட குழுவுடன் காணொளி தொழில்நுட்பத்தினூடாக இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின்போது 

இந்த தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் 

கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு