உறவினர்கள் கண்டதால் தப்பி ஓடிய காதலர்கள்..! காட்டில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்..

ஆசிரியர் - Editor I
உறவினர்கள் கண்டதால் தப்பி ஓடிய காதலர்கள்..! காட்டில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்..

சமூக வலைத்தளம் ஊடாக காதல் இளைஞனும், யுவதியும் சந்தித்து பேசிக் கொண்டிருந்ததை உறவினர்கள் கண்டதால் தப்பி ஓடியபோது மின் வேலியில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று முற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.26 வயதுடைய இளைஞன் ஒருவரும் 17 வயதுடைய யுவதி ஒருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதியின் வீட்டிற்கு அருகில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சமூக வலைத்தளத்தில் பழக்கமான குறித்த யுவதியை காண 

திக்வெல்ல பிரதேசத்தில் இருந்து குறித்த இளைஞன் வந்துள்ளான். பின்னர் யுவதியின் வீட்டிற்கு அருகில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை யுவதியின் வீட்டார் கண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த இருவரும் வீட்டிற்கு அருகில் சுமார் 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கருவாப்பட்டை தோட்டத்தை நோக்கி ஓடியுள்ள நிலையில் 

மின்சார வேலியில் சிக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய குற்றவியல் பிரிவு மற்றும் கொலொன்ன பொலிஸார் இணைந்து 

விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு