ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் சங்கிலியை உருவிய தாதி கைது!

ஆசிரியர் - Editor I
ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் சங்கிலியை உருவிய தாதி கைது!

ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் தங்க சங்கிலியை திருடிய தாதி கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

திருடப்பட்ட சங்கிலி சுமார் 2 லட்சம் ரூபாய் பெறுமதியானது என கூறப்படுகின்றது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடைமாற்ற அழைத்து சென்ற

குறித்த தாதி உடை மாற்றும்போது லாவகமாக சங்கிலியை அபகரித்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 

29 வயதான தாதியை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் மிரிஹான என்ற இடத்தில் இடம்பெற்றிருப்பதுடன், கைது செய்யப்பட்ட தாதி எத்துல்கோட்டை பகுதியை சேர்ந்தவர்

எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு