வடமாகாண முன்பள்ளிகள் அனைத்தும் 21ம் திகதி திறக்கப்படுகிறது..! பெற்றோருக்கு மாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாண முன்பள்ளிகள் அனைத்தும் 21ம் திகதி திறக்கப்படுகிறது..! பெற்றோருக்கு மாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

ஒக்டோபர் 21ம் திகதி வடமாகாணம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமே முன்பள்ளிகளும் திறக்கப்படும். என மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

ஆரம்ப பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சங்கடங்கள் எவையுமின்றி பாடசாலைக்கு அனுப்புமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் கேட்டுள்ளார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றி மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு