மாகாணங்களுக்கிடையில் பயணிகள் பேருந்து சேவை ஆரம்பம்! திகதி அறிவிக்கப்பட்டது, அதிக கட்டணம் வசூலித்தால் பேருந்தை பாதுகாப்பு படை கைப்பற்றுமாம்..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையில் பயணிகள் பேருந்து சேவை ஆரம்பம்! திகதி அறிவிக்கப்பட்டது, அதிக கட்டணம் வசூலித்தால் பேருந்தை பாதுகாப்பு படை கைப்பற்றுமாம்..

நாட்டில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் 21ம் திகதி வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார். 

எனினும், அதன்பின்பும் பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டால், சிறப்பு அனுமதியுடன் குறைந்தபட்சம் ஒரு சில பேருந்துகளையாவது மாகாணங்களுக்கு இடையே இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து பல்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அவ்வாறான பேருந்துகள் சில பாதுகாப்பு படையினரால் 

பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு