ஊரடங்கை தளர்த்தும்போதும் நாட்டை முழுமையாக திறக்காதீர்கள்..! அரசுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் அழுத்தம்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கை தளர்த்தும்போதும் நாட்டை முழுமையாக திறக்காதீர்கள்..! அரசுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் அழுத்தம்..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும்போது நாட்டை முழுமையாக திறக்கவேண்டாம். என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் ஹேமந்த ஹேரத் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். நாட்டை முழுமையாக ஒரே நேரத்தில் திறக்க பரிந்துரைக்கப்படவில்லை என்றும் 

நாடு முழுமையாகத் திறக்கப்படுமானால், நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.எனவே, படிப்படியாக நாட்டைத் திறப்பது மிகவும் பொருத்தமானது என்றும் இதனால் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் 

காரணிகள் உள்ளதா என்று நாம் அவதானிக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு