யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் மோதிரத்தை காணவில்லை!

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் மோதிரத்தை காணவில்லை!

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல்கலைகழக மாணவி ஒருவருடைய தங்க மோதிரம் காணாமல்போயுள்ளது. 

கடந்த 2ம் திகதி மாலை மேற்படி பல்கலைகழக மாணவி திடீர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் குறித்த மாணவி சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கின்றது. 

பின்னர் மாணவி மயக்கம் தெளிந்து பார்த்தபோது கையிலிருந்த மோதிரம் காணாமல்போயிருக்கின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பாக உடனடியாகவே மாணவி வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும், 

இதனையடுத்து வைத்தியசாலை நிர்வாகம் அதனை பொலிஸ் நிலையம்வரை கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு