யாழ்.நாவந்துறையில் 20 வயது இளைஞனை தாக்கி, சித்திரவதை செய்த பெண்கள்! உயிரை மாய்த்த இளைஞனுக்கு கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவந்துறையில் 20 வயது இளைஞனை தாக்கி, சித்திரவதை செய்த பெண்கள்! உயிரை மாய்த்த இளைஞனுக்கு கொரோனா தொற்று..

யாழ்.நாவாந்துறை - கண்ணாபுரம் கிராமத்தில் புறா வளர்ப்பில் உருவான தர்க்கத்தினால் இளைஞன் ஒருவரை இரு வாரங்களுக்கு முன்னர் பெண்கள் பலர் இணைந்து மிக மோசமான முறையில் மூர்க்கத்தனமாக தாக்கினர்.

 இந்த சம்பவத்தின் பின்னர் மனமுடைந்திருந்த பாதிக்கப்பட்ட இளைஞன் 26ம் திகதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இந்நிலையில் அவ்வாறு தற்கொலை செய்த பி.சுகந்தன் (20) என்ற குறித்த இளைஞனுக்கு 

கொரோனா தொற்று இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது. இதேவேளை அயலவர்கள் என்ற முறையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்படவில்லை. 

ஆனால் தற்கொலையின் பின்னர் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என பெண்கள் அமைப்பை சேர்ந்த ஒருவரிடம் என்னுடன் பேசும் போது தெரிவித்தார். தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் தற்கொலை தொடர்பிலும் 

உரிய விசாரணைகளை நடத்தி குறைந்தபட்ச நீதி கிடைக்க செய்ய மனித உரிமை ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு