பருத்தித்துறை நகர்ப்பகுதி நாளை விடுவிக்கப்படுகிறது! இவர்கள் மட்டுமே கடைகளை திறக்க முடியுமாம், சுகாதாரத்துறை இறுக்கம்..

ஆசிரியர் - Editor I
பருத்தித்துறை நகர்ப்பகுதி நாளை விடுவிக்கப்படுகிறது! இவர்கள் மட்டுமே கடைகளை திறக்க முடியுமாம், சுகாதாரத்துறை இறுக்கம்..

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து முடக்கப்பட்ட பருத்தித்துறை நகர் பகுதி நாளை தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படவுள்ளது. 

இதனடிப்படையில் நாளை அதிகாலை முதல் பயணத்தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை நகர்பகுதிக்கான தனிமைப்படுத்தல் தடை நீக்கப்பட்டாலும் நேற்றய தினம்

நகர் பகுதியில் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனைக்கு உள்ளாகி தொற்று உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்கள் தமது விற்பனை நிலையங்களைத் திறக்க முடியாது. அதேவேளை, தொற்று உறுதியாகாதவர்கள்  

விற்பனை நிலையங்களைத் திறக்கமுடியும். அதேபோல் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படாதவர்களும் விற்பனை நிலையங்களைத் திறக்க முடியாது என்றும் சுகாதாரத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு