யாழ்.காங்கேசன்துறை கடற்பகுதியில் கடற்படை அதிரடி! 250 கிலோ கஞ்சா மீட்பு, 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை கடற்பகுதியில் கடற்படை அதிரடி! 250 கிலோ கஞ்சா மீட்பு, 3 பேர் கைது..

யாழ்.காங்கேசன்துறை கடற்பகுதி ஊடாக இந்தியாவிலிருந்து சுமார் 250 கிலோ கிராம் கஞ்சாவை கடத்திவந்த 3 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டதுடன், கஞ்சாவும் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது, இது குறித்து மேலும் தொியவருவதாவது, காங்கேசன்துறை கடற்பகுதி ஊடாக சந்தேகத்திற்கிடமானமுறையில் கரையை நோக்கி பயணித்த 

படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டபோதும் படகில் கஞ்சா கடத்தப்பட்டமை தொியவந்துள்ளது. இதனையடுத்து கடத்தல்காரர்களை கைது செய்ததுடன், படகு மற்றும் கஞ்சாவை கடற்படை கைப்பற்றியுள்ளது. 

கைது செய்யப்பட்டவர் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு