மகனை தேடிவந்த வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் தாய், தந்தை படுகாயம்..! யாழ்.இணுவில் பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மகனை தேடிவந்த வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் தாய், தந்தை படுகாயம்..! யாழ்.இணுவில் பகுதியில் சம்பவம்..

யாழ்.இணுவில் - காரைக்கால் பகுதியில் மகனை தேடிவந்த வாள்வெட்டு குழு தாய், தகப்பன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்துள்ளது. 

இந்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தொியவருவதாவது, 

காரைக்கால் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு அந்த வீட்டில் உள்ள இளைஞனை தேடியுள்ளது. 

எனினும் இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் இளைஞனின் தாய், தந்தை மீது சரமாரியான தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக

கோப்பாய் பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த ஜெயக்குமார் மற்றும் அவருடைய மனைவி ஜெயக்குமாரி ஆகியோர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு