வாள்வெட்டு குழுக்களை அடக்க முடியாவிட்டால் தமிழர் நிலத்திலிருந்து பாதுகாப்பு தரப்பு வெளியேறட்டும், நாங்கள் பார்த்துக் கொள்வோம்..

ஆசிரியர் - Editor I
வாள்வெட்டு குழுக்களை அடக்க முடியாவிட்டால் தமிழர் நிலத்திலிருந்து பாதுகாப்பு தரப்பு வெளியேறட்டும், நாங்கள் பார்த்துக் கொள்வோம்..

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய “ஆவா குழு” போன்றவற்றை அடக்க முடியாவிட்டால் தமிழர் பகுதியிலிருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறவேண்டும். அதன் பின்னர் நாங்கள் பார்த்துக்கொள்வோம். 

மேற்கண்டவாறு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கின்றார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே 

அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்.மாவட்டத்தைப் பொருத்தவரை வாள்வெட்டு கலாச்சாரம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. 

அதிக அளவிலான பாதுகாப்பு தரப்பினர் இங்கு நிலைகொண்டுள்ள நிலையில் எவ்வாறு வாள் வெட்டு கும்பல்கள் சுதந்திரமாகச் செயற்படுகின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறைவு செய்தோம். 

என மார்தட்டிக் கொள்ளும் இலங்கை பாதுகாப்பு தரப்பு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை மட்டுமல்ல 

சிங்கள மக்களையும் ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் திரண்டு எழும்போது தனிமைப்படுத்தல் சட்டங்களை காரணங்கட்டி நீதி கேட்பவர்களை கைது செய்யும் 

செயற்பாடுகள் அண்மையில் அரங்கேறியுள்ளது. தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவியேற்ற போது வெடி கொளுத்தி கொண்டாடியவர்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டம் கிடையாது. 

பொலிசார் வேடிக்கை பார்த்தனர். அதேபோல் யாழ்ப்பாணத்திறகு விஜயம் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வடமராட்சியில் பங்குபற்றிய நிகழ்வுக்கு சுமார் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் குறித்த நிகழ்வில் 300க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதுடன் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தற்போதைய அரசாங்கமானது தனக்கு ஏற்ற முறையில் சட்டங்களை செயற்படுத்தி வருகின்ற நிலையில் 

சர்வதேச சமூகம் உற்று நோக்கி வருகிறது. சுமார் 700 மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வாங்குவதற்கு திண்டாடி வருகிறது.

ஆகவே சர்வதேசம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது என நினைத்து இலங்கை அரசாங்கம் எதை வேண்டுமானாலும் செய்து விடலாம் என நினைப்பது பூனை கண்ணை மூடி பால் குடிப்பதற்கு ஒப்பானது என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு