யாழ்.நகார வர்த்தகர்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு..! அறிக்கை சமர்பிக்கப்பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறக்க அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகார வர்த்தகர்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு..! அறிக்கை சமர்பிக்கப்பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறக்க அனுமதி..

பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவு அறிக்கையை சுகாதார பிரிவினரிடம் கையளிக்காவிட்டால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படாது. என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.நகரின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் 10 நாட்களுக்கு முடக்கப்பட்டிருந்கின்றது. அவ்வாறு முடக்கப்பட்டிருக்கும் பகுதி வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு முன்னர் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

அதன் முடிவு அறிக்கைகள் சுகாதார பிரிவிடம் கையளிக்கப்பட்டிருக்கவேண்டும். அதன் பின்பே வர்த்தக நிலையங்களை திறப்பதற்கான ஒப்புதல் வழங்கப்படும். என அவர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு