நாடு பூராகவும் இன்று தொடக்கம் 1 மாதகாலத்திற்கு சிறப்பு நடவடிக்கை..! பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு, பொதுமக்களே அவதானம்..

ஆசிரியர் - Editor I
நாடு பூராகவும் இன்று தொடக்கம் 1 மாதகாலத்திற்கு சிறப்பு நடவடிக்கை..! பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு, பொதுமக்களே அவதானம்..

நாடு முழுவதும் வாகனங்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

இன்று தொடக்கம் ஒரு மாதகாலம் இந்த சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது மதுபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகள் கைது செய்யப்படுவதுடன், 

சட்டவிரோத நடவடிக்கைகள் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.  

மது போதையில் வாகனம் செலுத்துவோரை பரிசோதிப்பதற்கு தேவையான உபகரணங்களை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பெற்றுக்கொடுத்துள்ளதாக 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.போட்டி போட்டுக்கொண்டு பஸ்களை செலுத்தும் சாரதிகளையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு