தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா

ஆசிரியர் - Admin
தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் புக­லி­டக் கோரிக்கை முன்­வைத்­துத் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த தமிழ்க் குடும்­ப­மொன்றை ஆஸ்­தி­ரே­லிய அரசு பல­வந்­த­மா­கச் சிறைப்­பி­டித்­த­து­டன் அவர்­களை இலங்­கைக்கு நாடு­க­டத்­த­வும் திட்­ட­மிட்­டுள்ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு 2013ஆம் ஆண்டு சென்ற நடே­ச­லிங்­கம், 2014ஆம் ஆண்டு திரு­ம­ணம் செய்­தார். ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பிலோலா நக­ரில் வாழ்ந்து வந்­தார். அவ­ரது மனைவி பிரி­யா­வின் இணைப்பு நுழை­வி­சைவு கடந்த மார்ச் 4ஆம் திக­தி­யு­டன் முடி­வ­டைந்­தது. அதனை நீடிப்­ப­தற்கு எடுத்த முயற்­சி­யும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

இந்த நிலை­யில், நடே­ச­லிங்­கம் அவ­ரது மனைவி பிரியா, அவர்­க­ளது இரண்டு குழந்­தை­களை நாடு கடத்த ஆஸ்­தி­ரே­லிய அரசு தீர்­மா­னித்­தது. கடந்த திங்­கட் கிழமை, பிலோலா நக­ரி­லுள்ள அவர்­க­ளது வீட்­டி­லி ருந்து நடே­ச­லிங்­கத்தை தனி­யான வாக­னத்­தி­லும், பிரி­யா­வை­யும் அவ­ரது இரண்டு குழந்­தை­க­ளை­ யும் மற்­றொரு வாக­னத்­தி­லும் பொலி­ஸார் மெல் பேர்ண் நகர தடுப்பு முகா­முக்கு ஏற்­றிச் சென்­றனர்.

பிரி­யா­வும் அவ­ரது இரண்டு குழந்­தை­க­ளும் ஒரே வாக­னத்­தில் ஏற்­றிச் செல்­லப்­பட்­டா­லும், குழந்­தை­கள் தாயு­டன் இருக்க அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.
இரு­வ­ரை­யும் தனித் தனி­யாகச் சிறை வைத்த பின்­னர், அவர்­கள் சுய விருப்­பின் அடிப்­ப­டை­யில் நாடு திரும்­புவ­தற்­கான ஆவ­ணங்­க­ளில் ஆஸ்­தி­ரே­லி­யப் பொலி­ஸார் கையெ­ழுத்து வாங்­கி­யுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு