“காளி அம்மன்” கனவில் அருளிய கொரோனா மருந்து..! ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள், கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I

காளி தனக்கு கனவில் அருளியதாக கூறி தம்மிகா பண்டார தயாரித்துள்ள கொரோனாவை குணப்படுத்தும் ஆயுள்வேத மருந்து பாணத்தை பெறுவதற்கான ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியுள்ளனர். 

இன்று 5 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாக ஆயுள்வேத மருந்து பாணம் வழங்குவதான தம்மிகா பண்டார கூறியுள்ளார். இதனையடுத்து அவருடைய வீட்டின் முன்னால் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர். 

இதனால் அங்கு பாரிய நெரிசில் காணப்படுகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்த தான் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத பானம் வெற்றியளித்துள்ளதாக அண்மையில் குறிப்பிட்ட மருத்துவர் 

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும் அதனை பருகி சோதனைசெய்தார். தம்மிகா பண்டாரா ஒரு காளி கோவிலை வைத்துள்ளதுடன் தனக்கு காளி கனவில் வந்து அருளியதாக கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு