இலங்கையில் தொடரும் கொரோனா மரணங்கள்..! மேலும் 3 பேர் மரணம், 61 ஆக உயர்ந்த மரண எண்ணிக்கை..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்றுடன் வேறு நோய்களும் இவர்களுக்கு இருந்துள்ளது. 

மொறட்டுவ பகுதியை சேர்ந்த 84 வயது பெண் இவர் வீட்டில் இறந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நீரிழிவு நோயும் இவரது மரணத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

கொழும்பு- 10 பகுதியை சேர்ந்த 70 வயது நபர். கொவிட் நோயுடன் சிறுநீரக நோய் மற்றும் பக்கவாததினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். 

கொழும்பு- 13 ஐ சேர்ந்த 75 வயது நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நீரிழிவு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு