யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் முடக்கலில் இருந்த 3 கிராமங்கள் நாளை விடுவிக்கப்படுகிறது..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பாசையூர் மேற்கு, திருநகர் ஆகிய இரு கிராமங்களும், கரவெட்டியில் ராஜகிராமமும் நாளை தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இந்தக் கிராமங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டதுடன், நோயாளிகளுடன் தொடர்புகளை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பிரிவினால் கண்காணிக்கப்பட்டது. 

இந்நிலையில் 3 கிராமங்களிலும் தொற்றாளர்கள் எவரும் கண்டறியப்படாத நிலையில் நாளை புதன்கிழமை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு