மக்கள் பதற்றமடைய தேவையில்லை..! யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் பாதுகாப்பாக உள்ளன, தனிமைப்படுத்தலில் இருந்த 12 பேருக்கே கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I
மக்கள் பதற்றமடைய தேவையில்லை..! யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் பாதுகாப்பாக உள்ளன, தனிமைப்படுத்தலில் இருந்த 12 பேருக்கே கொரோனா தொற்று..

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்த 24 பேருக்கு நடத்தப்பட்ட இரத்த பரிசோதனையில் 12 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் எற்கனவே 6 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

மிகுதியாக இருந்த 14 பேருக்கு இன்று 2ம் கட்ட பரிசோதனை நடாத்தப்பட்டபோது 8 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்தமை உறுதியானது. 

அதேபோல் ராகம மற்றும் வெலிசறை பகுதியில் இருந்து முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களில் 4 பேருக்குமாக மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

ஆகவே பொதுமக்கள் குழப்பமோ, பதற்றமோ படவேண்டாம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் இப்போதும் பாதுகாப்பாகவே உள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு