அதிர்ச்சி தகவல் வெளியானது..! யாழ்.மாவட்டத்தில் 8 கொரோனா நோயாளர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I
அதிர்ச்சி தகவல் வெளியானது..! யாழ்.மாவட்டத்தில் 8 கொரோனா நோயாளர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்..!

சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 போில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

அதேசமயம் கிளிநொச்சி- முழுங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேருக்கு 2ம் கட்ட பரிசோதனையும், கிளிநொச்சி கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கு 1ம் கட்ட பரிசோதனையுமாக

இன்று மொத்தமாக 24 பேருக்கு பரிசோதனை நடாத்தப்பட்டிருந்தது. அவர்களில் 12 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

இதற்கிடையில் யாழ்.மாவட்டத்தில் நோயாளர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு