இலண்டனிலும் கொலைமிரட்டல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரி ! (VIDEO)

ஆசிரியர் - Editor II
இலண்டனிலும் கொலைமிரட்டல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரி ! (VIDEO)

இலண்டனிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியொருவர் தமிழ் செயற்பாட்டாளர்களிற்கு விடுத்த கொலை மிரட்டல் காணொலி அனைத்து மட்டங்களிலும் கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

தூதரகத்திற்கு வெளியே இலண்டன் வாழ் தமிழ் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்த நிலையில் அவர்கள் தமிழர் தலைவர் பிரபாகரன் எங்கள் தலைவரென கோசமிடுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்க்க தூதரக அதிகாரிகளுடன் வெளியே வந்திருந்த இலங்கை இராணுவ அதிகாரியொருவரே ஆர்ப்பாட்டகாரர்களை கழுத்து வெட்டி படுகொலை செய்யப்போவதாக மிரட்டும் வகையில் தனது கைகளால் கழுத்தை அறுப்பது போன்று சமிக்கை செய்து காண்பித்துள்ளார்.

இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளை கழுத்தறுத்து கொலை செய்தவகையில் இலங்கை இராணுவம் இன அழிப்பு இராணுவமென மக்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையினில் இலண்டனில் அதே மனப்பாங்குடன் படை அதிகாரியொருவர் செயற்பட்டமை தொடர்பில் சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென்ற கோசம் வலுப்பெற்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு