யாழ்.மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! யாழ்ப்பாணம் கொழும்பு விமானசேவை..! நாளை ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! யாழ்ப்பாணம் கொழும்பு விமானசேவை..! நாளை ஆரம்பம்..!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு- இரத்மலானை இடையிலான தனியார் விமானசேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சேவையினை பெஸ்ட் எயர் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. 

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கி, வாரத்தில் மூன்று நாட்கள் இந்த விமான சேவை இடம்பெற உள்ளது.இதன்படி, திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் 

இந்த விமான சேவை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரத்மலானை விமான நிலையத்திலிருந்து காலை 7.30 க்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து 8.20 க்கும் இந்த விமான சேவை இடம்பெற உள்ளது.இரண்டு மணி நேர பயணம் கொண்ட குறித்த விமான வழித்தடத்தில் 

விமானப்படை விமானம் 9 ஆயிரம் ரூபா கட்டணத்தில் முன்னெடுக்கப்படும் நிலையில், பிட்ஸ் எயார் நிறுவன விமானம் 7 ஆயிரத்து 500 ரூபா கட்டணத்தில் தனது சேவையை முன்னெடுக்க உள்ளது.அத்துடன், இந்த விமான சேவைக்காக 70 ஆசனங்களைக் கொண்ட

 ATR 72 ரக விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. இதேவேளை, இந்த நிறுவனம் ஏற்கனவே மட்டக்களப்புக்கு தனது விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு