யாழ்.பண்ணை கடற்கரையில் கொரூரம்..! பல்கலைகழக மாணவி கழுத்தறுத்து கொலை, இராணுவ சிப்பாய் கைது..

ஆசிரியர் - Editor I

யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர்  ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு தண்ணீரில் போட்டப்பட்ட நிலையில் கொலையாளியை உடனடியாக பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

இந்த சம்பவம் சற்று முன்னர் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், 

குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

2ம் இணைப்பு

கொலை செய்யப்பட்ட மாணவி பேருவளை பகுதியை சேர்ந்த யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவி ரோசினி ஹன்சனா (வயது29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு இணைந்திருங்கள்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு