கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 5 போ் விபத்தில் சிக்கி படுகாயம்..! 2 போின் நிலை கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 5 போ் விபத்தில் சிக்கி படுகாயம்..! 2 போின் நிலை கவலைக்கிடம்..

சிலாபம்- ஆனமடுவ வீதியில் பள்ளம் சேருகெலே பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சோ்ந்த 5 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதக்கப்பட்டிருக்கின்றனா். 

வானொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஐவருள் இருவர் பலத்த காயமடைந்துள்ளதால், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களென்றும் கனடாவிலிருந்து வருகைத் தந்த தமது உறவினரொருவரை வரவேற்பதற்காக, இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வந்தப் போதே, இவ்வாறு விபத்து இடம்பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு