பல உயிா்களை பலி எடுத்த பின்னரும் பாதுகாப்பு கடவை அமைக்க மறுக்கும் புகைரத திணைக்களம்..! மக்கள் போராட்டத்தால் பணிந்தது..

ஆசிரியர் - Editor I
பல உயிா்களை பலி எடுத்த பின்னரும் பாதுகாப்பு கடவை அமைக்க மறுக்கும் புகைரத திணைக்களம்..! மக்கள் போராட்டத்தால் பணிந்தது..

அண்மையில் பாாிய விபத்து இடம்பெற்ற கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் புகைரத பாதையில் பாதுகாப்பு கடவை ஒன்றை அமைத்து தருமாறு கோாி இன்று காலை அப்பகுதி மக்கள் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனா்.

இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து சுமார் 1 மணிநேரம் தாமதித்தே பயணத்தைத் தொடர வேண்டி ஏற்பட்டது. போராட்டத்தை மேற்கொண்ட மக்களை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் 

மற்றம் தொடருந்துத் திணைக்கள அதிகாரிகள் சந்தித்தனர். ஒலியுடன் கூடிய பாதுகாப்பு வெளிச்சத்தை அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொண்டு தருவதாக கூறியதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

மின்னால் இயங்கும் பாதுகாப்புக் கடவையை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். குறித்த கோரிக்கையை எழுத்து மூலமாக வழங்குமாறும், தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தொடருந்துது் திணைக்கள அதிகாரிகள் கூறினர். 

வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட மக்கள் அதன் பின்னர் தமது போராட்டத்தை கைவிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு