பொலிஸ் உத்தியோகத்தரை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய பதில் பொலிஸ்மா அதிபா்..! 3 ஆண்டுகள் சிறை..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் உத்தியோகத்தரை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய பதில் பொலிஸ்மா அதிபா்..! 3 ஆண்டுகள் சிறை..

பொலிஸ் உத்தியோகத்ரை தனிப்பட்ட வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் காலி மாவட்ட முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபா் ஹெக்டா் தா்மசிறிக்கு 3 வருட சிறை தண்டணை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த 2007 ஆம் ஆண்டு தனது வீட்டின் தனிப்பட்ட வேலைகளுக்காக பொலிஸாரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முறைப்பாட்டை பதிவு செய்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று 

கொழும்பு நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிவான் மூன்று வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு