முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் அவசர சிகிச்சை பிாிவில்..! சினிமாவை மிஞ்சும் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் அவசர சிகிச்சை பிாிவில்..! சினிமாவை மிஞ்சும் சம்பவம்..

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் ஹேமசிறி பொ்ணான்டோ இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவேண்டிய நிலையில் அவசர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நேற்று உத்தரவிடப்பட்டிருந்தது.சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு