வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகை..! தமிழரசு கட்சி உறுப்பினா்கள் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களுடன் தா்க்கம்..

ஆசிரியர் - Editor I
வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகை..! தமிழரசு கட்சி உறுப்பினா்கள் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களுடன் தா்க்கம்..

தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் மாநாடு நடைபெறும் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்திவருகின்றனா். 

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. என வலியுறுத்தி இந்த கவனயீா்ப்பு போராட்டம் உறவினா்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் மாநாட்டு மண்டபத்திற்குள் நுழையாத வண்ணம் நுழைவாயில்களில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதுடன், விசேட அதிரடிப்படையினரும் அங்கு காணப்படுகின்றனா்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களிடம் சென்ற தமிழரசு கட்சி உறுப்பினா்கள் சிலா் நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தனின் வழிநடத்தலில் இந்த போராட்டம் செய்கிறீா்கள் என குற்றஞ்சாட்டினாா். 

இதனால் இரு தரப்பினருக்குமிடையில் வாய்த்தா்க்கம் மூண்டது.   

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு