வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் திட்டம்..! பொலிஸ் பாதுகாப்பு உச்சம்..

ஆசிரியர் - Editor I
வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் திட்டம்..! பொலிஸ் பாதுகாப்பு உச்சம்..

இலங்கை தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுவரும் நிலையில், காணாமல்போனவா்களின் உறவினா்கள் போராட்டம் நடாத்தவுள்ள நிலையில் பொலிஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள், பங்காளி கட்சிகளின் தலைவா்கள், தமிழரசு கட்சியின் முக்கியஸ்த்தா்கள் கலந்து கொண்டிருக்கின்றனா். 

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் தொடா் போராட்டம் நடாத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக தொியவருகின்றது. 

இந்நிலையில் வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு