காக்கா, குருவி தங்க பேருந்து நிலையம் கட்டிவிட்டு பாா்த்துக் கொண்டிருக்கும் அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
காக்கா, குருவி தங்க பேருந்து நிலையம் கட்டிவிட்டு பாா்த்துக் கொண்டிருக்கும் அதிகாாிகள்..

முல்லைத்தீவு - மாங்குளம், பொதுச்சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையம், ஆறுமாதங்கள் கடந்த நிலையிலும் இன்றுவரை, திறக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வடமாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில், குறித்த பேருந்து தரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டு, நிறைவுற்றிருக்கும் நிலையில் ஆறுமாதங்களாகியும் இன்றுவரை மக்கள் பாவனைக்காக 

திறந்து வைக்கப்படவில்லை. இந்ந பேருந்து தரிப்பு நிலையம் திறக்கப் படாததால், மக்கள் இன்றும் பேருந்துகளுக்காக வீதியோரங்களில் காத்திருக்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை மாங்குளம் பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த, பேருந்து தரிப்பு நிலையம் திறக்கப்பட்டால் சந்தை வியாபாரமும் பல்மடங்கு பெருகும்.மேலும் மாங்குளத்தில் மிக நீண்ட காலம் நிலவி வந்த 

பேருந்து தரிப்பு நிலைய பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடம், ஆறுமாதங்களாகியும் திறக்கப்படாமை மிகுந்த வேதனையளிப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே உரிய அதிகாரிகள் இந்த பேருந்து தரிப்பு நிலையத்தினைத் திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு