மரண தண்டணை பட்டியலில் 1ம் இடத்தில் பெண் குற்றவாளி..!

ஆசிரியர் - Editor I
மரண தண்டணை பட்டியலில் 1ம் இடத்தில் பெண் குற்றவாளி..!

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டணை விதிக்க ஜனாதிபதி தீா்மானித்துள்ள நிலையில் 1வதாக பெண் குற்றவாளி ஒருவாின் பெயரே இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

போதைப்பொருள் கடத்தல், விற்பனை உட்பட அது சார்ந்த குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு, தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 18 கைதிகளின் பெயர் பட்டியல் நீதி அமைச்சால், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு தூக்குத் தண்டனை வழங்கும் உத்தரவில் தான் கையொப்பமிட்டுள்ளார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்தே பட்டியலிலுள்ள 18 பேரும் கலக்கத்தில் இருப்பதாகவும், அவர்களின் நடத்தையில் மாற்றம் தென்படுவதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு