மைதானத்தில் அடித்து கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்த்தா்..! நாளாந்த விசாரணைக்கு தவணையிட்டது யாழ்.மேல் நீதிமன்றம்..

ஆசிரியர் - Editor I
மைதானத்தில் அடித்து கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்த்தா்..! நாளாந்த விசாரணைக்கு தவணையிட்டது யாழ்.மேல் நீதிமன்றம்..

யாழ்.வட்டுக்கோட்டை- பிக்னல் விளையாட்டு மைதானத்தில் இளம் குடும்பஸ்தா் அடித்து கொலை செய்யப்பட்டமை தொடா்பாக 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திாிகை மீதான விசாரணை 9ம் மாதம் 5ம் திகதி தொடக்கம் நாளாந்த விசாரணைக்கு எடுக்க யாழ்.மேல் நீதிமன்றம் தவணையிட்டுள்ளது. 

சந்­தே­க­ந­பர்­கள் தரப்­பில் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கையை ஏற்ற நீதி­மன்று, வழக்­ கின் அத்­தனை சாட்­சி­க­ளை­யும் மன்­றில் மீள­வும் முற்­ப­ட­வும் உத்­த­ர­விட்­டது. வட்­டுக்­ கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூ­ரிக்­கும், யாழ்ப்­பா­ணம் சென்.பற்­றிக்ஸ் கல்­லூ­ரிக்­கும் இடையே 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி 

வட்­டுக்­கோட்டை பிக்­னல் மைதா­னத்­தில் துடுப்­பாட்­டப் போட்டி நடை­பெற்­றது. அதில் இரு தரப்­பு­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட முறு­கல் நிலமை மோத­லா­னது. யாழ்ப்­பா­ணம் பிர­தான வீதி­யைச் சேர்ந்­த­வ­ரும் சென்.பற்­றிக்ஸ் கல்­லூ­ரி­யின் பழைய மாண­வ­னு­ மான ஜெய­ரட்­ணம் டினோ­சன் அம­லன் (வயது 24) என்­னும் ஒரு பிள்­ளை­யின் 

தந்தை அதில் உயி­ரி­ழந்­தார். சம்­ப­வத்­தை­ய­டுத்து வட்­டுக்­கோட்டை பொலிஸ் நிலை­ யத்­தில் 9 பேர் வரை சரண்­டைந்­த­னர். மல்­லா­கம் நீதி­மன்­றில் சுருக்க முறை­யற்ற விசா­ரணை இடம்­பெற்­றது. அத­னை­ய­டுத்து 6 பேருக்கு எதி­ரா­கக் கொலைக் குற்­றச்­ சாட்­டின் கீழான குற்­றப் பத்­தி­ரிகை 

யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் சட்ட மா அதி­ப­ரால் தாக்­கல் செய்­யப்­பட்­டது. வழக்­ கின் சாட்­சி­யப் பதி­வு­கள் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றின் அப்­போ­தைய நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் முன்­னி­லை­யில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனி­னும் முத­லாம் மற்­றும் இரண்­டாம் எதி­ரி­க­ளின் சட்­டத்­த­ர­ணி­க­ளால் 

இந்த வழக்கை இடை நிறுத்­து­வ­தற்­கான மனு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­பட்­டது. மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் முன்­னி­ லை­யில் வழக்கு விசா­ரணை நடத்த ஆட்­சே­பனை தெரி­வித்தே இந்த மனுத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

அந்த மனு மீதான ஆரம்ப விசா­ர­ணை­யில் மனு­தா­ரர்­க­ளின் சட்­டத்­த­ர­ணி­கள் முன் வைத்த சமர்ப்­ப­ணத்தை முக­த­ள­வில் ஏற்­றுக்­கொண்ட மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம், யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் இந்த வழக்கை விசா­ரிக்க இடைக்­கா­லத் தடை உத்­த­ ரவை 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி வழங்­கி­யது.

அதன்­பின்­னர் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் யாழ்ப்­பா­ ணத்­தி­லி­ருந்து மாற்­ற­லாகி திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யா­கப் பொறுப்­ பேற்­ற­தால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் தாக்­கல் செய்த மனுவை 2018ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் மனு­தா­ரர்­கள் மீளப்­பெற்­றுக் கொண்­ட­னர். 

அதை­ய­டுத்து இந்­தக் கொலை வழக்கை யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் சட்ட மா அதி­பர் திணைக்­க­ளம் மீளத் திறந்­தது. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­ லிங்­கம் பிரே­ம­சங்­கர் முன்­னி­லை­யில் வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. வழக்­குத் தொடு­நர் சார்­பில் அரச சட்­ட­வாதி மாதினி விக்­னேஸ்­வ­ரன் 

மன்­றில் முன்­னி­லை­யா­னார். முத­லா­வது எதி­ரிக்­காக சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ர­ னும், இரண்­டா­வது எதி­ரிக்­காக கேச­வன் சயந்­த­னும் ஏனைய எதி­ரி­க­ளுக்­காக சட்­டத்­த­ ர­ணி­கள் வி.திருக்­கு­ம­ரன், கே.சுகாஷ் ஆகி­யோ­ரும் முன்­னி­லை­யா­னார்­கள். குற்­ற­வி­ யல் வழக்கை விசா­ரணை செய்த நீதி­பதி மாற்­ற­லா­கிச் செல்­லும்­போது, 

வழக்­கின்  சாட்­சி­களை மீளப் பதிவு செய்­யக் கோரும் சட்ட ஏற்­பாடு எதிரி தரப்­புக்கு உள்­ளது. அத­ன­டிப்­ப­டை­யில் இந்த வழக்­கி­லும் அனைத்து சாட்­சி­க­ளை­யும் அழைத்து மீள விளக்­கம் நடத்த அனு­ம­திக்­க­வேண்­டும் என்று எதி­ரி­கள் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­கள் மன்­று­ரைத்­த­னர்.

அதை ஆராய்ந்த மன்று, வழக்­கின் அத்­தனை சாட்­சி­க­ளை­யும் மன்­றில் முற்­ப­டு­வ­தற்­ கான அழைப்­புக் கட்­ட­ளை­யைச் சேர்ப்­பிக்க பதி­வா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டது. வழக்கை நாளாந்த விளக்­கத்­துக்­காக செப்­ரெம்­பர் 5,6,9 மற்­றும் 10ஆம் திக­தி­க­ளில் நிய­மித்து மேல் நீதி­மன்­றம் தவ­ணை­யிட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு