லண்டனில் கவனயீர்ப்பு: அலறும் சிங்கள ஊடகங்கள்!

ஆசிரியர் - Admin
லண்டனில் கவனயீர்ப்பு: அலறும் சிங்கள ஊடகங்கள்!

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு உலகிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்னால் இனப்படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகிறதென சிங்கள ஊடகங்கள் இன்று கதறத்தொடங்கியுள்ளன.

தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் இலங்கையர்கள் சிலரால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது மனிதப் படுகொலைகள் இடம்பெற்றதாகவும், அதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருவதாகவும் சிங்கள ஊடகங்கள் இன்று பரபரக்க தொடங்கியுள்ளன.

உலகில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பின் அமைப்பின் கொடிகளை ஏந்தியவண்ணம் சுமார் 30 பெயரளவில் ஓவல் மைதானத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என சிங்கள ஊடகங்கள் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு