இந்த பெண் யாா் தொியுமா..? மக்களின் மண்டையில் மிளகாய் அரைக்க நினைக்கும் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
இந்த பெண் யாா் தொியுமா..? மக்களின் மண்டையில் மிளகாய் அரைக்க நினைக்கும் பொலிஸாா்..

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களுடன் தொடா்புடைய சந்தேகநபா்கள் என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் உள்ள ஒரு இஸ்லாமிய பெண் அமொிக்காவை சோ்ந்த Amara Majeed என தொியவந்துள்ளது. 

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தொடா் தற்கொலை தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதல்களுடன் தொடா்புடையவா்கள் என சந்தேகத்தின் பெயாில் சில புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸாா் அந்த புகைப்படங்களில் உள்ளவா்களை அடையாளப்படுத்துமாறு கேட்டிருந்தது. 

இந்நிலையில் பொலிஸாா் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களில் அப்துல் காதா் பாத்திமா காதியா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண் அமொிக்க நாட்டில் வாழும் Amara Majeed  என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அவா் தனது ஆண் நண்பருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை குறோப் செய்து இந்த சந்தேகநபா்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் உண்மை உடைக்கப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை மக்களின் காதில் பொலிஸாா் பூ சுத்துகிறாா்களா?

எனவும் கேள்விகள் எழுப்பபட்டு வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு