மைத்திரி உண்மையை மறைப்பது குற்றம்! - என்கிறார் மஹிந்த

ஆசிரியர் - Admin
மைத்திரி உண்மையை மறைப்பது குற்றம்! - என்கிறார் மஹிந்த

நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை மறைப்பதும் ஒருவகையில் குற்றமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.     

கொழும்பில்இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உங்களின் நிலைப்பாடு என்ன ?

பதில் - அவரது கருத்து பாரதூரமானது. குண்டுத்தாக்குதல் தொடர்பில் அவருக்கு ஏதும் தெரிந்திருந்தால் அதனை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும்.நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.உண்மை தெரிந்திருந்தும் அதனை மறைப்பதும் குற்றமாக கருதப்படும்.

கேள்வி -ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

பதில் - அவசரப்பட வேண்டியதில்லை.உரிய நேரத்தில் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.

கேள்வி – ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினைக்குரியதாக உள்ளதாலா பொதுத்தேர்தலை கேட்கின்றீர்கள் ?

பதில் - அவ்வாறில்லை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சி தான் பொதுத்தேர்தலிலும் வெற்றி பெறும்.சகல தரப்புக்கும் சம அந்தஸ்து கிடைக்கப்பெற வேண்டுமாயின் பொதுத்தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும்.

கேள்வி – கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்புகள் வெளிப்பட்டுள்ளதே ?

பதில்- ரோஹித்த அபேகுணவர்தன மக்கள் பிரதிநிதி ஆகவே அவர் கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிநபரை தலைவராக நியமிக்கவில்லை.

கேள்வி - இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்கள் சவால்மிக்கதே ?

பதில் -ஆம் இந்த சவால்களை காட்டிலும் பாரிய சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.தற்போதைய சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்வோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு