கோத்தாவை தெரிவு செய்ய மக்கள் முட்டாள்களில்லை! - விக்ரமபாகு

ஆசிரியர் - Admin
கோத்தாவை தெரிவு செய்ய மக்கள் முட்டாள்களில்லை! - விக்ரமபாகு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் அளவுக்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை என்று விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“யுத்தக் காலத்தின்போதும் கோத்தாபய ராஜபக்ஷ பயனற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டார். நாட்டில் பல கொலைகளை செய்தார். இதற்கான சாட்சிகளும் இருக்கின்றன. இவ்வாறான கொலைக் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று நான் நம்பவில்லை. 

இதுபோன்ற ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் அளவுக்கு நாட்டு மக்களும் முட்டாள்கள் இல்லை. மக்கள் அறிவாளிகள். கோத்தாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களமிறக்கினால், அந்தக் கட்சிக்கு இருக்கும் வாக்குகள் கூட கிடைக்காமல் போய்விடும்.

ஒருவகையில், இவ்வாறான ஒருவர் வேட்பாளராக களமிறங்குவது நன்மையே என்றும் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், இவரை எதிர்த்து போட்டியிடும் தலைவர் ஒருவரால் இலகுவாக வெற்றி பெறமுடியும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பிரச்சினை இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தக் கூட்டணி தொடர்பாக ஒரு முடிவுக்கு வர இதுவரையில் முடியாமல் இருக்கிறது.

அதையும் மீறி ராஜபக்ஷக்களின் ஒருவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது வேட்பாளராக களமிறக்கப்பட்டால், அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு பாரிய பின்னடைவாகவும் ஏமாற்றமாகவுமே அமையும். இதனால், மைத்திரி அணியினருக்கு பொதுஜன பெரமுன கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமைக்கூட ஏற்படலாம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு