மஹிந்த ராஜபக்ஸ நான்றாக நடிக்கிறாா், அவரும் அவருடைய சகோதரனும் செய்த அநியாயங்கள் கொஞ்சமல்ல..
2004ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு இறுதிவரையில் அரசாங்கம் அமைத்திருந்த மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருடைய சகோதரன் கோட்டாபாய ராஜபக்ஸ ஆகியோா் நாட்டை கொ லைக் கலாசாரத்துக்குள் வைத்திருந்தாா்கள். அதற்கு இவா்கள்தான் காரணம்.
இவர்கள்தான் போர்க்காலத்தின்போது போர் விதிகளை மீறி போர்க்குற்றங்களும் இடம்பெற வழிவகுத்தார்கள். குற்றமிழைத்தவர்களை விட அதற்கு உத்தரவிட்டவர்களும் தலைமை தாங்கியவர்களும்தான் மாபெரும் குற்றவாளிகள்.
அப்படிப்பட்டவர்கள் இப்போது நல்ல பெயர் எடுக்க நடிக்கின்றார்கள். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க காட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் போரின்போது போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று மகிந்த ராஜபக்ச கொழும்பு நகர மண்டபத்தில்
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்திருந்தார். ரணில் விக்கிரமசிங்க வடக் குக்குச் சென்று போர்க்குற்றம் இடம்பெற்றிருக்கின்றது என்று ஒப்புக்கொண்டு நாட்டை பன் னாட் டுச் சமூகத்துக்கு காட்டிக் கொடுத்து விட்டார் என்றும்
அவர் தனது உரையில் சுட்டிக்காட் டியிருந்தார். மகிந்த ராஜபக்ச இவ்வாறு குற்றம் சுமத்தியுள் ளமை தொடர்பில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்று மகிந்த ராஜபக்ச வெட்கம் இல்லாமல் கூறுகின்றார். போர்க்குற்றங்களையும், கொலைகளையும் அவர் அரங்கேற்றியதால்தான் கடந்த அரச தலைவர் தேர்தலில் அவரைத் தமிழ் மக்கள்
ஓரங்கட்டினார்கள். போர்க் காலகட்டத்தில் ஒரு புறம் விடுதலைப்புலிகளும் மறுபுறம் அரச படைகளும் போர்க்குற்றங்களை இழைத்தார்கள். இதை நாம் மறுக்க முடியாது. பழையதைக் கிளறிக் கொண்டிருக்காமல் நடந்த உண்மைகளை ஏற்றிக் கொண்டு,
மறப்போம் மன்னிப்போம். அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்டலாம். பழை யதைக் கிளறுவதில் பயன் இல்லை. நாம் அனைவரும் புதிய வழியில் ஓரணியில் பயணிக்க வேண்டும். இதைத்தான் வடக்கில் நான் வலியுறுத்தி இருந்தேன்.
ஆனால், நான் வடக்கில் வைத்து நாட்டை பன்னாட்டுச் சமூகத்திடம் காட்டிக்கொடுத்து விட் டேன் என்று மகிந்த ராஜபக்ச தெற்கில் பொய்ப் பரப்புரை முன்னெடுக்கின்றார். பல கொலைக ளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் உத்தரவிட்ட அவர், இப்படிப் பொய்யுரைப்பது வெட்கக்கேடு.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் மீது பன்னாட்டு அழுத்தங்கள் என்றுமில்லாத வகையில் அதிகரித்திருந்தன. ஆனால், 2015ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த அழுத்தங் களை குறைக்கச் செய்தோம். கடும் வலுவுடைய ஜெனிவாத் தீர்மானங்களை
மென்மையாக்கி னோம். மூவின மக்களையும் அரவணைத்து ஆட்சியை நடத்தி னோம். ஆனால், கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி பதவி ஆசை பிடித்த கூட்டணி யால் எமது ஆட்சி 52 நாள்கள் கவிழ்க்கப்பட்டிருந்தன.
அந்த நாள்களில் இந்தக் கூட்டணியினர் நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தையே அசிங்கமாக்கினார்கள். இதனால் நாட்டின் மீதான பன்னாட்டு அழுத்தங்கள் மீண்டும் அதிக ரிக்கத் தொடங்கின.
அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்று நான் சொல்லத் தேவையில்லை. நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் உள்நாட்டு அரசியலில் எம் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
ஆனால், பன்னாட்டு மட்டத்தில் இலங்கையின் நற்பெயரைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நாட்டைக் கொடுக்கும் நோக்கம் எனக்கில்லை – என்றார்.