ஒரு வீட்டுக்குள் மோதிக் கொள்ளும் பசில்- வீரசவன்ச, கட்சிக்குள் செல்வாக்கை இழக்கிறாா் வீரவன்ச..

ஆசிரியர் - Editor I
ஒரு வீட்டுக்குள் மோதிக் கொள்ளும் பசில்- வீரசவன்ச, கட்சிக்குள் செல்வாக்கை இழக்கிறாா் வீரவன்ச..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளா் பசில் ராஜபக்ஸவுக்கும் நாடாளு மன்ற உறுப்பினா் விமல் வீரவன்சவுக்கும் இடையில் மிகமோசமான மோதல் உருவாகியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக விமல் வீரவங்ச தரப்பு பொதுஜன பெரமுனவுக்குள் வாய்ப்பை இழக்கும் ஆப த்து ஏற்பட்டுள்ளது. வீரவங்ச கலந்துக்கொள்ளும் அரசியல் பேச்சுவார்த்தைகளில் கூட பசில் ரா ஜபக்ச கலந்துக்கொள்ள தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், இணக்கப்பாடு ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் எதிர்காலத்தில் நடக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என பசில் ராஜபக்ச கூறியிருந்தார்.

பசில் ராஜபக்சவின் இந்த கருத்தை விமர்சித்து விமல் வீரவங்ச நடத்தி வரும் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இருவருக்கும் இடையிலான மோதலின் வெளிப்பாடே இந்த செய் தியை வெளியிட காரணம் எனவும் பேசப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு