யாழ். ஏழாலையில் ஆசிரியையொருவரின் வீட்டில் வினோத திருட்டு!

ஆசிரியர் - Admin
யாழ். ஏழாலையில் ஆசிரியையொருவரின் வீட்டில் வினோத திருட்டு!

புதிதாக கட்டிய வீடொன்றில் குடிபுகுந்த மறுதினமே வீட்டிலிருந்து தாலிக்கொடி உட்பட 45 பவுண் தங்க நகைகள் மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (21) யாழ்.ஏழாலை ஏழு கோயில் வீதியிலுள்ள ஆசிரியையொருவரின் வீட்டிலேயே குறித்த துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கைப்பைக்குள் நகைகள் மற்றும் பணத்தைப் பத்திரமாக வைத்துவிட்டு ஆசிரியர் உறக்கத்துக்குச் சென்றுள்ளார். மேற்படி வீட்டிலிருந்த ஏனையவர்களும் உறங்கி விட்டனர்.

இந்நிலையில் மறுநாளான நேற்றைய தினம்(22) அதிகாலை வேளையில் குறித்த ஆசிரியர் உறக்கத்தால் துயிலெழுந்து பார்த்த போது வீட்டு யன்னலூடாக அவரது கைப்பை மட்டும் தொங்கிக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து கைப்பையை எடுத்துப் பார்த்த ஆசிரியை அதற்குள்ளிருந்த பெறுமதியான தாலிக் கொடி, தங்கநகைகள், பணம் என்பன திருடப்பட்டிருப்பது கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வீட்டில் திருடர்கள் எவரும் நுழைந்தமைக்கான தடயங்கள் காணப்படாத நிலையில் வீட்டின் யன்னலூடாக குறித்த கைப்பை கொழுவி எடுக்கப்பட்டுத் திருடப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி கொள்ளைச் சம்பவம் குறித்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு