அம்பாறையில் இருந்து யாழ். சென்ற பஸ் விபத்து! - ஒருவர் பலி, மூவர் காயம்

ஆசிரியர் - Editor I
அம்பாறையில் இருந்து யாழ். சென்ற பஸ் விபத்து! - ஒருவர் பலி, மூவர் காயம்

கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மொனராத்தென்ன பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனனர். 

அம்பாறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கல்முனை சாலைக்குச் சொந்தமான இ.போ.ச பஸ்ஸுடன், பொலொன்னறுவையிலிருந்து வெலிக்கந்தை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி, மோதியதில், இவ்விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, படுகாயமடைந்த மூவர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய பஸ்ஸில் இருந்த பயணிகள் தமது பயணத்தை தங்கு தடையின்றித் தொடர்வதற்காக வேறு பஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் பயணிகள் எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் கல்முனை இலங்கைப் போக்குவரத்துச் சபை சாலை முகாமையாளர் வெள்ளத்தம்பி ஜவ்பர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு