நீதிமன்றில் உண்மையை உளறிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றில் உண்மையை உளறிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்..

மணிவண்ணன் எங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது எமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மணிவண்ணன் யாழ் மாநகர உறுப்பினராகத் தொடர்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு எதிரான மேன் முறையீட்டு விசாரணை இன்று நடைபெற்றது. இதன்போது நீதிபதி சுமந்திரனை நோக்கி ஒரு இளம் சட்டத்தரணியான அரசியல்வாதியின் வாழ்க்கையை ஏன் இப்படி பாழாக்க நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்தபோதே சுமந்திரன் மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முனைவதாக குறிப்பிட்டார்.

மணிவண்ணன் யாழ் மாநகர பகுதியைச் சேர்ந்தவரல்ல எனவே அவரது உறுப்பினர் பதவியை நீக்கவேண்டும் எனக் கோரி தமிழரசுக் கட்சி ஆதரவாளர் எனக் கூறப்படும் ஒருவர் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து உயர் நீதிமன்று மணிவண்ணனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் அதனை எதிர்த்து மணிவண்ணன் மேன்முறையீடு செய்தார். குறித்த  மேன் முறையீட்டின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது இடைக்காலத் தடை விதித்த  வழக்கு 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் இடைக்காலத் தடைக்கு எதிரான மேன் முறையீடு வழக்கை அம் முடிவு வரும்வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு