வவுனியா நகாிலுள்ள வா்த்தகா்கள் செய்யும் அநியாயம், இரகசிய கமராக்களுடன் நடமாடும் பெண்கள்..

ஆசிரியர் - Editor I
வவுனியா நகாிலுள்ள வா்த்தகா்கள் செய்யும் அநியாயம், இரகசிய கமராக்களுடன் நடமாடும் பெண்கள்..

வவுனியா நகா்ப்பகுதியில் வா்த்தக நிலையங்களுக்கு செல்லும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்து கொள்ளும் சில ஆ ண்களை சட்டத்தின் முன் நிறுத்தவதற்காக பெண்கள் மற்றும் சில ஆண்கள் இரகசிய கமராக்களுடன் நடாமாடுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 

இது குறித்து மேலும் தொியவருவதாவது,  நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் பொருட்களை கொ ள்வனவு செய்ய செல்லும் பெண்களுடன் அங்கிருக்கும் சில ஆண்கள் இரட்டை அர்த்த சொற்களை பிரயோகிக்கின்றமை தகாத செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் அண்மையில் தகவல்கள் சில வெளிக்கொணரப்பட்டுள்ளன.

இந் நிலையில் சில இளைஞர்,யுவதிகள் இணைந்து இரகசிய கமராக்கள் சகிதம் வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்வதுடன் எவரேனும் பெண்களுடன் இரட்டை அர்த்த வசனங்களையோ அல்லது பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் 

செயற்பாட்டிலோ ஈடுபடுகின்றனரா எனவும் கண்காணித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த செயற்பாட்டிற்கு சில குடும்ப பெண்களின் உதவியையும் இளைஞர்கள் கோரியுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் குடும்ப பெண்களிடமும் 

இரகசிய கமராக்கள் மூலம் இச்செயற்பாட்டை கண்காணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு