புதுாா் பகுதியில் துப்பாக்கியை வீசிட்டு சென்ற சம்பவம் தொடா்பில் பெண் உட்பட 3 போ் இதுவரை கைது..

ஆசிரியர் - Editor I
புதுாா் பகுதியில் துப்பாக்கியை வீசிட்டு சென்ற சம்பவம் தொடா்பில் பெண் உட்பட 3 போ் இதுவரை கைது..

வவுனியா- புளியங்குளம், புதுாா் பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை வீசிவிட்டு சென்ற சம்பவம் தொடா்பில்  ச ந்தேகத்தின் பெயாில் பெண் உட்பட 3 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். 

புதுர்ப் பகுதியில. சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபர், பொலிசாரைக் கண்டவுடன் கையில் இருந்து பை ஒன்றினை தூக்கி எறிந்து விட்டுத் தப்பியோடினார். 

பையில் இருந்து ஓர் கைத்துப்பாக்கி , 4 எறிகுண்டு , 2 கைத் தொலைபேசி என்பன கடந்த முதலாம் திகதி மீட்கப்பட்டது என்று கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மறுநாள் புதுர்ப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கனகராயன்குளம் , ஆலங்குளம் , புதுக்குளம் பகுதிகளில் படையினரும் பொலிஸாரும் இனைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களிலேயே மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு