ஐக்கியதேசிய கட்சியின் உட்கட்சி பூசல் முற்றுப் பெற்றது. நாளை அமைச்சரவை பதவியேற்பு..

ஆசிரியர் - Editor I
ஐக்கியதேசிய கட்சியின் உட்கட்சி பூசல் முற்றுப் பெற்றது. நாளை அமைச்சரவை பதவியேற்பு..

ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினா்களான மங்கள சமரவீர மற்றும் ரணி கருணாநாய க்க ஆகியோருக்கிடையிலான பிணக்கு தற்போது முற்று பெற்றுள்ளது. 

இதனையடுத்து நாளை புதிய அமைச்சரவை பதவியேற்று இடம்பெறும் என ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. 

நிதி அமைச்சைப் பொறுப்பேற்றுக்கொள்வதில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் இருந்த போட்டி 

நிலை தற்போது தணிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சக்திவளத்துறை அமைச்சை பொறுப்பேற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சராக மங்கள சமரவீர பதவியேற்கவுள்ளதுடன், அமைச்சரவையின் 20 உறுப்பினர்கள் நாளை பதவியேற்கவுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் அடுத்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு