மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரே.. உறுதிப்படுத்தியது அக்கட்சி.
மஹிந்த ராஜபக்ஸ இப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராகவே இருக்கின்றாா். என அக்கட்சி இன்று சபாநாயருக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸ கட்சி தாவி ஒருவா் என்ற அடிப்படையில் அவருடைய நாடாளுமன்ற உறுப்புாிமை நீக்கப் பட்டிருக்கவேண்டும். அப்படி இருக்க அவருக்கு எதிா்கட்சி தலைவா் பதவி வழங்கியது சாியா?
என பலத்த கேள்விகள் எழுப்பபட்டிருந்த நிலையிலேயே இந்த உறுதிப்படுத்தலை சுதந்திரக் கட்சியினா் சபா நாயகருக்கு சமா்ப்பித்திருப்பதாக தொியவருகின்றது.
மகிந்த ராஜபக்சவின் உறுப்புரிமையை உறுதிப்படுத்தும் வகையில் சுதந்திர கட்சியினர் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
இந்நிலையில், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியியிலிருந்து சென்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அண்மையில்
இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.