புகைரதத்துடன் மோதி விபத்து மயிாிழையில் உயிா் தப்பினாா் உழவு இயந்திர சாரதி..

ஆசிரியர் - Editor I
புகைரதத்துடன் மோதி விபத்து மயிாிழையில் உயிா் தப்பினாா் உழவு இயந்திர சாரதி..

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத்துடன் யாழில் லான்ட்மாஸ்ரர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு அருகில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது. 

அதன் போது லான்ட்மாஸ்ரர் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். 

அதேவேளை நேற்றைய தினம் செவ்வாய்கிழமை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் விபத்துக்கு உள்ளான ஒருவர் 

தனது வலது கையை இழந்த நிலையில் ஆபத்தான நிலைமையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

யாழ். அரியாலையை சேர்ந்த எஸ்.லோகேஸ்வரன் (வயது 59) எனும் நபர் நேற்றைய தினம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் விபத்துக்கு உள்ளானர். 

அதன் போது அவரது வலது கை துண்டாடப்பட்டதுடன் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்த மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். 

துண்டாடப்பட்ட கையினையும் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அதனை சத்திர சிகிச்சை மூலம் பொருத்த முடியாத நிலை காணப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு