இயல்பு வாழ்வை மிக விரைவாக சீா்செய்வோம்.. ரணில் விக்கிரமசிங்க உறுதி.

ஆசிரியர் - Editor I
இயல்பு வாழ்வை மிக விரைவாக சீா்செய்வோம்.. ரணில் விக்கிரமசிங்க உறுதி.

இலங்கையில் அரசியல் குழப்பங்களால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இயல்பு நிலையை மிக விரைவில் சாி செய்வோம் என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா். 

ஜனாதிபதி முன்னிலையில் பிரதமராக சந்தியப் பிரமாணம் செய்த பின்னா் உரையாற்றும்போதே ரணில் வி க்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

“ அரசியல் நெருக்கடி காரணமாக துரதிர்ஷ்டவசமாக சில வாரங்கள் மோசமடைந்தாலும் நாட்டின் இயல்பு நிலையை உடனடியாக சரி செய்வோம்.

நாடாளுமன்றம், நீதிமன்றம் என்பன நாட்டில் ஜனநாயகத்தினை நிலைநாட்ட நீதியுடன் செயற்பட்டன. இது மக்களுக்கு கிடைத்த நீதி.

இந்நிலையில், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். நான் பிரதமராக பதவியேற்றுள்னே்.

அடுத்ததாக அமைச்சரவை பதவியேற்கும். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முழுமையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு