ஜனாதிபதியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்கவே நான் பதவியை துறந்தேன்.. விழுந்தும் மீசையில் மண்படாத மஹிந்த பேச்சு..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்கவே நான் பதவியை துறந்தேன்.. விழுந்தும் மீசையில் மண்படாத மஹிந்த பேச்சு..

நாடாளுமன்ற பொதுத்தோ்தல் ஒன்று நடாத்தப்படாமல் பிரதமா் பதவியில் தொடா்ந்தும் இருக்கவேண்டிய எந்த அவசியமும் தனக்கில்லை. என கூறியிருக்கும் மஹிந்த ராஜபக்ஸ,

ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார். 

தனது பதவி விலகல் குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள விஷேட அறிக்கை மூலம் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

பெப்ரவரி 10ம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மக்களுக்கு பொதுத் தேர்தல் ஒன்றை பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காக இருந்தது. 

பொதுத் தேர்தல் இன்றி பிரதமராக பதவி வகிக்கும் எதிர்பார்ப்பு இல்லை என்பதாலும் தீர்மானங்கள் எடுக்கும் போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருப்பதற்கும் தான் 

பிரதமர் பதவியில் இருந்து விலகி புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு வழிவிடுவதாக அவர் கூறியுள்ளார். 

மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். 

எதிர்வரும் நாட்களில் எமது பிரதான இலக்காக இருப்பது, இன்றாகும் போது ஒரு வருடமும் மூன்று மாதங்களால் தாமதமடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே. 

தேர்தல் இன்றி முன்னோக்கிச் செல்லும் வேலைத் திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. 

மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டிருப்பது போன்று எல்லை நிர்ணய பிரச்சினையை ஏற்படுத்தி 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலையும் பிற்பொடுவதற்கே 

அவர்கள் திட்டுமிடிகின்றார்கள் என்று மஹிந்த ரஜபக்ஷ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு