சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்படுவதை கண்டித்து போராட்டம்..

ஆசிரியர் - Editor I
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்படுவதை கண்டித்து போராட்டம்..

உடுவில் பிரதேச செயலகம் முன்பாக ஒன்று கூடிய பொது மக்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக குடிமனைக்கு நடுவில் உள்ள பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. 

சித்திரவதை, கொலை போன்று மனிதத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சுன்னாகம் பொலிஸார் பொது மக்களின் குடிமனைகளுக்கு நடுவில் நிலை கொள்ள வேண்டாம் என்ற பிரதான கோசமும் ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டுள்ளது. 

சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் தற்போது பொலிஸ் நிலையத்தினை இயக்கிவரும் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸாருக்கு மாற்றுக் காணியை வழங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது. 

இதன்படி சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் உள்ள மிருக வைத்திய சாலைக்கு அருகில் உள்ள அரச காணி சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும் குறித்த அரச காணி தமக்கு பொருத்தம் இல்லை என்று கூறிவரும் சுன்னாகம் பொலிஸார் சுன்னாகம் பகுதியில் கே.கே.எஸ் வீதிக்கு மிக அருகில் உள்ள புலம் பெயர் நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ள பொது மகன் ஒருவருடைய 14 பரப்பு காணியை தருமாறு கோரி வந்தனர். 

இதன்படி அக் காணியை சுவீகரித்து பொலிஸாருக்கு ஒப்படைப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே சுன்னாகம் பகுதி மக்கள் இன்று திங்கட்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தின் முன் திரண்டு பொலிஸ் நிலையத்திற்காக பொது மகனின் காணியை சுவீகரிப்பது மற்றும் குடிமனைக்கு நடுவில் பொலிஸ் நிலையம் வேண்டாம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த காலங்களில் கடத்தல், சித்திரவரை மற்றும் கொலை போன்ற மனிதத்துவத்திற்கு எதிரான பல செயற்பாடுகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் மக்கள் குடிமனைக்கு நடுவில் வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

இக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் மக்கள் உடுவில் பிரதேச செயலரிடம் கையளித்திருந்தனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு